Thursday 10 December 2020

Covid – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்


Covid – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழமாக காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவுசெய்யுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Covid – 19 தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் சுமார் 36 நாட்களுக்கு வைரஸ் காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம், மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாதென சுட்டிக்காட்டிய பிரதமர் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்ததாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

No comments: