Monday 12 October 2020

10 துப்பாக்கிகளை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

haran




திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத  துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3பேரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவினர், 10 துப்பாக்கிகளை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன்கோயிலுக்கு முன்னால் இயங்கிவரும், லேத் மெசின் கடையினை முற்றுகையிட்டனர். அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்

இதனையடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும் பாகமான துப்பாக்கியின் மரத்திலான பிடியை தயாரித்து வந்த, தச்சு தொழிலாழியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: