Saturday 26 September 2020

பலத்த காற்றினால் 03கடைகள் சேதம்,


தில்லை வாணி 0777039996   

பலத்த காற்றினால் 03கடைகள் சேதம், போக்குவரத்து மின்சாரம் துண்டிப்பு 

அம்பாறையில் பல பகுதிகளில் பெய்துவரும் காற்றுடனான மழையினை தொடர்ந்து கோமாரி-1 , பி- 23 கழுகொள்ள என்னும் இடத்தில் இன்று (26)மாலை.வீதியின் நடுவே சரிந்து விழுந்த மரத்தால் மூன்று கடைகள் சேதமாகின 


இதன் போது பொத்துவில் அக்கரைப்பற்று  பிரதான வீதி  போக்குவரத்து பல மணி நேரங்கள் முற்றாக தடைப்பட்டிருந்ததுடன் இவ் மரம் மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்தில் சரிந்து விழுந்ததினால் மின்சாரமும் தடைப்பட்ட்டு உள்ளது 

சரிந்து விழுந்த மரத்தினை பிரதேச சபைஉறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுடன் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மரம் அகற்றப்பட்ட்து 

ஞனமுத்து மோகன்ராஜா என்பவரது கடை முற்றுமுழுதாக சேதமடையுந்துள்ளதுடன் இளையதம்பி காமலேஸ்வரி மற்றும்சின்னய்யா இரட்ணசிங்கம் அகியோர்களது கடைகளும் 
சேதமைடந்துள்ளதுடன் தெய்வாதீனமாக உயிரிழப்புக்கள் ஏதும் இடம் பெறவில்லை என்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்துவருகின்றமை  குறிப்பிடத்தக்கது 


பகுதி கிராம சேவகர் ராஜேந்திரன் 077 1272 777

பொத்துவில் பொலிஸ் தொ.பே.இல---063 22 48 022

No comments: