Wednesday 16 December 2020

படைப்புழு தாக்கம்

தில்லைநாயகம் வாணி & வினோதினி 



அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மற்றும் மணல்சேனை பகுதிகளில் செய்கைப் பண்ணப்பட்டுள்ள சோளம் பயிர்கள் படைப்புழு தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோமாரி விவசாய விரிவாக்கல் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 40 ஹெக்டயர் நிலப்பரப்பில் சோளம் செய்யை பண்ணப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 50 சதவீதத்துக்கு மேலாக படைப்புழுத் தாக்கம் ஏற்பட்டுள்ளதை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

2018ஆம் ஆண்டும் கோமாரி, பொத்துவில் பிரதேசங்களில் ஏற்பட்ட படைப்புழுத் தாக்கத்தால் 2019ஆம் ஆண்டு சோளம் செய்கை மேற்கொள்ள முடியாதளவு பொருளாதார ரீதியாகப் பாதித்திருந்த நிலையில், இம்முறை சோளம் செய்கை மேற்கொண்டிருந்த நிலையில் மீண்டும் இந்தப் படைப்பூழு தாக்கம் ஏற்பட்டிருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தையும் பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்

haran

No comments: