Saturday 26 September 2020

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு

haran
வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு  




கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் படுகாயமுற்றநிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சின்னவெம்பு கிரானைச் சேர்ந்த அ.கிருஷாந் வயது (20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கும்புறுமூலை பாசிக்குடா வீதியில் நேற்று செவ்வாய் கிழமை மாலை ஒன்றன் பின் ஒன்றாக சென்ற மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியுமே மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: