Monday 14 September 2015

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்

.நௌஷாத்...

   SLFP GIZ அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம்ஆகியன இணைந்து எமது கரையோர மாவட்டத்திலுள்ள சிறு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும்அவர்களுடைய உணவு உற்பத்திச் செயன்முறையை முறையாகவும்பாதுகாப்பாகவும் நடைமுறைப்படுத்தும் வகையிலும் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்ற தொணிப் பொருளில் பயிற்சிச் செயலமர்வு செப்டம்பர் 12,13ம் திகதிகளில் சுவாட் கேட்போர் கூட மண்டபத்தில் இணையத்தின் உதவித் தவிசாளர் திரு : V. பரமசிங்கம் அவர்களின் தலைமையிலும், SLFPA நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் : திருநிரஞ்சன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலுடன் நடாத்தியது..





மேலும், இந்நிகழ்வில் SLFPA நிறுவனத்தின் வளவாளர்களான திரு: ரீ.கிருஸ்ணராஜ் ( வவுனியா) மற்றும் .ஜே.எம். இம்றாஸ் ஆகியோரால் உணவுப்பாதுகாப்பு முறைகள் , சிறந்த விவசாய நடைமுறைகள், உணவு நுண்ணுயிரியல் மற்றும் அபாயகரமாகும் உணவுகள் அத்துடன் பொதி செய்தல் மற்றும் உணவு தொடர்பான சட்டங்கள்,தனிப்பட்ட துப்புரவும் கிருமி நீக்கலும், அனர்த்தப் பகுப்பாய்வு முக்கிய கட்டுப்பாட்டுப்புள்ளி ஆகிய தலைப்புக்களில் பங்குபற்றுனர்களுக்கு குழு வேலைப்பாடுகள் மற்றும் விளக்கப்படங்கள் மூலம் விரிவுரைகள் வழங்கப்பட்டது. இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் உட்பட இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சிறு உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் SLFPA , GIZ அனுசரணையுடனான பெறுமதியான சான்றிதழும் வழங்கப்பட்டது.

No comments: