Thursday 17 September 2015

விபத்தில் காயம்

அம்பாறை, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில்  வியாழக்கிழமை நண்பகல் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் கிராம அலுவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த கிராம அலுவலர் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

No comments: