Tuesday 29 September 2015

இலஞ்சம் பெற்ற இருவர் கைது

அம்பாறை மாவட்டத்திலுள்ள கமநல சேவை மத்திய நிலையமொன்றில் கடமையாற்றிவந்த முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் திங்கட்கிழமை (28) மாலை  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விவசாயி ஒருவரிடமிருந்து 8,000 ரூபாவை இலஞ்சமாக பெறும்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்

No comments: