Sunday 27 September 2015

மஹாலய பஹ்ஷம் இன்று

இந்துக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய தென்புலத்தார் என்று சொல்லப்படுகின்ற பிதுர்களை நினைத்து அவர்களுக்காக வருடா வருடம் புரட்டாதிமாத தேய்பிறை பிரதமையில் ஆரம்பமாகி அமாவாசை வரையான 14நாட்களும் எமது சந்நிதியில் மரணித்து மூண்று தலைமுறையினை நினைத்து கொடுக்கப்படுகின்ற தான தர்மங்கள் எமது வாழ்வில் மிகப் பெரிதான நல் வாழ்விற்கு வழி வகுக்கும்

மகா-ளயம் என்பது பிதிர்கள் பூமிக்கு வரும் நாள் என்று பொருள் படும் பிதிர்களான எமது தாய் தந்தையர் உட்பட எமது மூதாதையர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசையில் தர்ப்பனம் தானம் செய்ய முடியாதவர்கள் இந்த மஹாலய பஹ்ஷ காலத்தில் தானம்களை செய்வதால் பன்னிரண்டு மாதம்களிலும் செய்த பலன் உண்டாகும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றது

பிதுர்களை நாம் சாந்தப்படுத்தும் போது இப் பிறப்பின் நாம் செய்யூம் சகல காரிங்களும் விக்கினம்கள் இன்றி நன்றாக நடப்பதுடன் எமது சந்ததி வாழையடி வாழையாக இப் புவியில் வாழ்வாதற்கு வழி கோலும் என்று சொல்லப் பட்டிருக்கின்றது 

No comments: