மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று, வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு வவுணத்தீவிலுள்ள பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில், இவ்விரு பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, அவ்விடத்துக்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலேயே, மேற்படி இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களில் தினேஸ் என்பவர், பெரிய நீலாவனைப பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பிரசன்னா என்பவர் காலியைச் சேர்ந்தவர் என்றும்; கூறப்படுகின்றது.
மேற்படி இருவரும் வைத்திருந்த துப்பாக்கிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தையடுத்து மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், ஸ்தளத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுஇச் சம்பவத்தையடுத்து மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், ஸ்தளத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
haran
No comments:
Post a Comment