Monday 31 August 2015

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூன்று பேர கைது

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வீடுகளுக்கு மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று பேரை திங்கட்கிழமை (31) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அக்கரைப்பற்று பொலிஸாருடன் இலங்கை மின்சார சபையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

 இவர்களில் இரண்டு பேர் மின்வாசிப்புமானியில் குளறுபடி செய்து மின்னிணைப்பை பெற்றுள்ளதுடன், மற்றைய நபர் மின்கம்பியில் கொழுவி மின்னிணைப்பை பெற்றுள்ளதாகவும்  பொலிஸார்; கூறினர்

இவர்களை நீதிமன்றில்ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன்  இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் 



No comments: