Sunday 30 August 2015

வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வேன் தயா கமகே

அம்பாறை மாவட்ட பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான செயற்திட்டத்தை அனோமா கமகே முன்னெடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் எம்.எம். முஹம்மட் நிஸாம் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் பெண்கள் சார்பாக அனோமா கமகேயை நியமித்துள்ளார். அவர் பெண்கள் அமைப்போடு இணைந்து குறிப்பாக அம்பாறை மாவட்ட பெண்களுக்காக பாடுபடுவார். மேலும்,நான் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றவுடன் எனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வேன் என்றார். 

No comments: