Monday 31 August 2015

8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை (01) காலை 9.00 மணி முதல் 3.30 மணிவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் பதவிப்பிரமாணங்களை செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சரவையின் பிரதி பேச்சாளரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த தலைவர் கரு ஜயசூரியவினால், புதிய அமைச்சரவைக்கு பொருத்தமான பேச்சாளர் தொடர்பாக முன்மொழியப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments: