Monday 17 August 2015

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 61 வீதமான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் மாலை 04 மணிவரை 60 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக வாக்களிப்பு நிலையங்களுக்கு தலைமை தாங்கிய சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை அளித்தனர். வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றது. நண்பகல் 12 மணிக்கு முன்னர் மந்தகதியில் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த போதிலும், பிற்பகல் வேளையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனை பொத்துவீல் சம்மாந்துறை தேர்தல் தொகுதிகளில் 61விகிதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக பவ்ரல் தேர்தல் கண்காணிப்பின் மாவட்ட அதிகாரி கே.சத்தியனாதன் தெரிவித்துள்ளார்.

No comments: