Monday 24 August 2015

புதிய எம்.பி.க்களுக்கான கரும பீடம் நாடாளுமன்ற கட்டடடத் தொகுதியில்

நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் நலன் கருதி நாடாளுமன்ற கட்டடடத் தொகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கரும பீடம் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு திறந்திருக்கும். 8 ஆவது நாடாளுமன்றத்தில் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டத் தொடரை முன்னெடுப்பதற்கு தேவையான ஒழுங்குகளை தயார் செய்வதன் நிமித்தம் இந்த கரும பீடம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இன்றுக் காலை 9.30க்கு திறக்கப்பட்ட இந்த கரும பீடத்தில், எதிர்வரும் 3 நாட்களுக்கு காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 வரையான காலப்பகுதியில் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். 

No comments: