மஹிந்த சிந்தனை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் சமுகசேவைகள் அமைச்சின் தேசிய முதியோர் செயலகத்தினால் 60 வயதுக்கு மேற்பட்ட கட்புலன் குறைந்த முதியவர்களுக்குக் கண்வில்லைகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக ஆலையடிவேம்பு கிராமத்தினைச் சேர்ந்த மாரிமுத்து மாசிலாமணி என்ற பார்வைத்திறன் குறைந்த முதியவருக்கு இலவச கண்வில்லைகள் இன்று, 30-07-2014 புதன்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அப்பிரிவின் முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.எம்.பாயிஸ் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment