Monday 11 August 2014

இரத்ததான நிகழ்வு

செய்தி:  பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வரின் ஏற்பாட்டில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறைக் கிளையின் அனுசரணையோடு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (06) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
Displaying SAM_1451.JPG Displaying SAM_1445.JPG
Displaying SAM_1502.JPG Displaying SAM_1516.JPG
ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட சுமார் 100 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்த இந்நிகழ்வினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் ஆரம்பித்துவைத்தார்.
இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் செல்வி. சந்திமா பெத்தவடு தலைமையில் இரத்த வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டதுடன், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவத்திற்கான கள உத்தியோகத்தரும் முதலுதவிப் பயிற்றுவிப்பாளருமான எஸ்.சசிதரன் மற்றும் அதன் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments: