Sunday 13 April 2014

"சுயதொழில் ஊக்குவிப்புக்கான நன்கொடை வழங்கிவைப்பு"

சேவ் த சில்ரன் எனப்படும் சர்வதேச அரசுசாரா நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று – 8/2 இல் தொழிற்படும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் (WDF) அளிக்கம்பை, தேவகிராமத்திலுள்ள வறுமைக் கோட்டின்கீழ் வாழுகின்ற பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றின் வாழ்வாதார மேம்பாட்டின் பொருட்டு ஆடு வளர்ப்பிற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு இன்று 09-04-2014, புதன்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரி.சின்னமசக்கா, ரி.மயூரன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகள் ரூபாய். 25,000 நன்கொடையைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர்.பிரபாகரன், தேவகிராமத் தலைவர் வி.விமல், அளிக்கம்பை கிராமசேவை உத்தியோகத்தர் கே.லோகநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.
Photo: "சுயதொழில் ஊக்குவிப்புக்கான நன்கொடை வழங்கிவைப்பு"

சேவ் த சில்ரன் எனப்படும் சர்வதேச அரசுசாரா நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று – 8/2 இல் தொழிற்படும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் (WDF) அளிக்கம்பை, தேவகிராமத்திலுள்ள வறுமைக் கோட்டின்கீழ் வாழுகின்ற பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றின் வாழ்வாதார மேம்பாட்டின் பொருட்டு ஆடு வளர்ப்பிற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு இன்று 09-04-2014, புதன்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரி.சின்னமசக்கா, ரி.மயூரன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகள் ரூபாய். 25,000 நன்கொடையைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர்.பிரபாகரன், தேவகிராமத் தலைவர் வி.விமல், அளிக்கம்பை கிராமசேவை உத்தியோகத்தர் கே.லோகநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.4

No comments: