Friday 25 April 2014

அலுவலக அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு அலுவலக அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு   பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பிரிவில் கடமையாற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பாத்திமா சிபாயா றமீஸ், முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவள ஆலோசகர் திருமதி.சப்றினா ரஸீன், சிறுவர் உள மற்றும் சமுக பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.யசோதா கபிலன் ஆகியோர் தமக்கான அலுவலக அடையாள அட்டைகளைப் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீல், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சசீந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.

No comments: