Thursday 21 September 2017

சட்டவிரோதமாக ஆற்று மண் ஒருவர் கைது

(க-சரவணன்)

மட்டக்களப்பில் இருந்து அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்திற்கு
சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் ஆற்று  மண் எடுத்துச் சென்ற ஒருவரை நேற்று புதன்கிழமை மாலை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தை மீட்டுள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் தெரிவித்தனர்.


பொலிசாருக்கு  கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மத்தியமுகாம் இறாணமடு பிரதேசத்தில் வைத்து சம்பவதினம் மாலை உழவு இயந்திரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று  மண்ணை எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவததில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

haran

No comments: