Tuesday 26 September 2017

சின்னம் சூட்டும் நிகழ்வு

(செ.துஜியந்தன்)

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது.


ஒரு பாடசாலையில் அதிபர்  ஆசிரியர்களுக்கு அடுத்ததாக மாணவத்தலைவர்களே ஏனைய மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கின்றவர்களாகவுள்ளனர். மாணவத் தலைவர்களாக இருப்பவர்கள் ஏனையோருக்கு முன்மாதிரியாக திகழ்வதுடன் பாடசாலையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் என்றும் பாடுபடவேண்டும் என அதிபர் க.சத்தியமோகன் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






haran

No comments: