Sunday 17 September 2017

அறநெறி பரிட்சை முன்னோடிக்கருத்தரங்கு

haran
              (ஜெ.ஜெய்ஷிகன்)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அறநெறிக்கல்வி இறுதியாண்டு பரிட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்களுக்கான முன்னோடிக்கருத்தரங்கு
16.09.2017ம் திகதி காலை 8.30 மணிக்கு நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் நடைபெற்றது. மேற்படி கருத்தரங்கு காலை 8.30 மணிக்கு இறைவணக்கத்துடன் ஆரம்பமானது இக்கருத்தரங்கில் ஓய்வுபெற்ற அதிபர், சைவப்புலவர் திரு.இ.கோபாலபிள்ளை அவர்கள் இந்துசமய வரலாறு எனும் தலைப்பிலும், கிழக்குப்பல்கலை கழக இந்துநாகரீகத்துறை உதவி விரிவுரையாளர் திரு.ஜெ.பால்ராஜ் சமூகவாழ்வியல் எனும் தலைப்பிலும்,  கிழக்குப்பல்கலை கழக இந்துநாகரீகத்துறை உதவி விரிவுரையாளர் செல்வி.அ..பவித்திரா இந்துசமய இலக்கியங்கள் எனும் தலைப்பிலும், திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.து.சிவதர்சினி இந்துசமய மெய்யியல் எனும் தலைப்பிலும் விரிவுரைகளை ஆற்றினர்.

இக்கருத்தரங்கு நிகழ்வில் 18 அறநெறி பாடசாலைகளை சேர்ந்த 81 பரீட்சார்த்திகளும், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 









No comments: