Tuesday 26 September 2017

காட்டுயானைகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது

haran

யு.எல்.எம். றியாஸ்-

ம்மாந்துறை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்கள் தற்போது காட்டுயானைகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது இதனால் இப் பகுதி மக்கள் இரவு வேளைகளில் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்துவருகின்றனர்.

நேற்றும், இன்றும் சம்மாந்துறை பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குதலால் பலபிரதேசங்கள் சேதத்திற்குள்ளாகியுயள்ளன.
சம்மாந்துறை அலவாக்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகள் வீடுகள் சுவர்கள்,மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.
இது தாக்குதலினால் ஒரு வீட்டின் கூரை உட்பட வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது அத்துடன் வீட்டுத்தோட்டங்களையும் சேதமாக்கியுள்ளது .எதுவித உயிராபத்துமின்றி வீட்டில் உறங்கியவர்கள் தெய்வாதீனமாக தப்பிச்சென்றனர்.

யானைத்தாக்குதலுக்கு இலக்கண அலவாக்கரை பிரதேசத்திற்கு சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசியக் கடைசியில் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி நேரில் சென்று பார்வையிடடார்.

இதேவேளை நேற்று சம்மாந்துறை சமிடபுரம் உடங்கா - 2 .கிராமத்தில் உள்ள அரிசி ஆலையொன்றும் யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது அத்துடன் அரிசி ஆலையினுள் இருந்த நெல் மூடடைகளையும் சேதப்படுத்தியுள்ளது. 

சம்மாந்துறை பிரதேசத்தில் வேளாண்மை அறுவடைக்குப்பின்னரான காலத்திலேயே காட்டுயானைகளின் ஊருக்குள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments: