Wednesday 4 May 2016


சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கட்புலன் குறைந்தோருக்கான உதவித் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்டோருக்கு இலவச மூக்குக்கண்ணாடி மற்றும் கண் வில்லைகளை (லென்ஸ்) வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (04) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் உதவியுடன் 6 பேர் மூக்குக்கண்ணாடிகளையும், அங்கவீனர்களுக்கான தேசிய செயலகத்தின் உதவியுடன் 9 பேர் கண் வில்லைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.ரக்கீபும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.சிவானந்தமும் கலந்துகொண்டனர்.







No comments: