Saturday 16 June 2018

விஞ்ஞானமுகாம்

haran
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞானமுகாம் இன்று (16.06.2018) மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலையில்) பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்கள் நாடாவினை வெட்டி முகாமினை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளரும், மன்முனை தென் எருவில்பற்று பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.த.அருள்ராசா, மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர்களான திரு.எஸ்.நாகேந்திரன், திருமதி.அ.சற்குணராசா ஆகியோரும் ஆரம்பக் கல்விப் பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான திருமதி.ர.நவரெட்ணராசா, திருமதி.ச.தில்லைநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து விஞ்ஞான முகாமினை பார்வையிட்டனர்.





 



















பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவினரால் நடாத்தப்பட்ட விஞ்ஞானமுகாம். Rating: 4.5 Diposkan Oleh: chithdassan

No comments: