Tuesday 5 June 2018

தடைசெய்யப்பட்ட டைனமைட்

சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்ட பெருமளவு மீன்கள் மாவட்ட கடற்றொழில் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையிலான அதிகாரிளினால் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வாழைச்சேனை தியாவெட்டுவான் மீன்வாடியொன்றில் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்ட 170 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மீன்களை அழிக்குமாறும் சந்தேக நபர்மீதான வழக்கு விசாரணையை எதிர்வரும் வியாழக்கிழமை ஒத்திவைக்குமாறு நீதிபதி எம்.ஐ.எம்.ரியாழ் உத்தரவிட்டார்.
வாழைச்சேனையில் தடைசெய்யப்பட்ட டைனமைட் பாவித்து மீன்பிடித்த நபர் கைது! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: