Thursday 13 July 2017

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

அக்கரைப்பற்றில் பல இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.




கடந்த பல நாட்களாக அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய இடங்களில் பெண்களின் தங்க ஆபரணங்களை இவர் கொள்ளையிட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் 50 ஆயிரம் ரூபா பணத்தையும் கைத்தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை மூன்று நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
haran

No comments: