Monday 17 July 2017

விபத்தில் இளைஞன் பலி

(ஷமி மண்டூர்)

வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  தும்பங்கேணி திக்கோடை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற  விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

தும்பங்கேணி திக்கோடை பிரதான வீதியுடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முருகேசு-தனுஜன் (15) மற்றும் தினேஸ்(15) ஆகிய இருவரும் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் இருவரையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் முருகேசு-தனுஜன் (15) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும்  தினேஸ்(15) என்பவர் சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலுதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
haran

No comments: