Wednesday 5 July 2017

ஊடக பயிற்சிப் பட்டறை

haran
(துறையூர் தாஸன்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஊடகப்பிரிவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட காரியாலயமும் இணைந்து,மட்டு அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான இரு நாள் வதிவிட ஊடக பயிற்சிப் பட்டறை,மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய பயிற்சி நிலையத்தில்,கடந்த இரு நாட்களாக(04,05) இடம்பெற்றது.

ஊடகப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு,பத்திரிகை செய்தி வகைகள்,பத்திரிகைகளுக்கான விசேட கட்டுரைகள்,செய்திகள் எழுதுதல் தொடர்பாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறவிப்பாளரும் லேக் ஹவுஸ் நிறுவன சிரேஸ்ட ஊடகவியலாளருமான விசு கருணாநிதியினாலும் வானொலி தொலைக்காட்சித் துறைகளின் வரலாற்று பரிணாம வளர்ச்சி மற்றும் இலங்கை வானொலித் துறையின் வரலாறு சார்ந்து இலங்கைத் தமிழ் ஓசை வானொலி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.ஜெசீம் ஆகியோர் முதல் நாள் செயலமர்வை, கலந்துரையாடல் குழுச் செயற்பாடு பாங்கில் முன்னெடுத்திருந்தனர்.

ஊடகத்துறை வரலாறும் பரிணாம வளர்ச்சியும் ஊடகவியல் மற்றும் செய்தியாளர்களின் கடமைகள்,செய்தி அறிக்கைப்படுத்தல் தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளர் யூ.எல்.மப்ரூக் மற்றும் தொலைக்காட்சி,வானொலி ஊடகங்களில் மொழிப் பயன்பாடு மற்றும் செய்தி வாசிப்பு தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான நசீர் எம்.அகமட் ஆகியோர் இரண்டாம் நாள் கலந்துரையாடல் கருத்தமர்வை வழிநடத்திச் சென்றனர்.

நிருபராக மாத்திரமன்றி தரமான சிறந்த ஊடகவியலாளர்களையும் நெறிமுறை சார் ஊடக கலாசார தர்மத்தை பேணும் நோக்கில்,அடிப்படை பயிற்சி மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள்கள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளின் ஏனைய கலை கலாசார ஆற்றல்களையும் இதன்போது இனங்காண முடிந்தது.










No comments: