Saturday 12 March 2016

கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுக்க முற்பட்டவர் கைது

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்திலுள்ள குறுக்கு  வீதியில் பிரத்தியேக வகுப்புக்கு நேற்று  வெள்ளிக்கிழமை சைக்கிளில் சென்ற மாணவி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுக்க முற்பட்டதாகக் கூறப்படும்
மோட்டார் சைக்கிளில் வந்த 28 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன்,  மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இம்மாணவியின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, அம்மாணவி சங்கிலியை கையால் பிடித்தவாறு கீழே விழுந்துள்ளதுடன், சத்தமிட்டுள்ளார்.

இந்தச் சத்தத்தைக் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து சந்தேக நபரை பிடிக்க முற்பட்டனர்.

 இருப்பினும், சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். இதன்போது  மோட்டார்; சைக்கிளின் இலக்கத்தகட்டு இலக்கத்தை பொதுமக்கள் குறித்துக்கொண்டு, பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்து அவ்விலக்கத்தையும் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளன

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை  அடுத்து  சந்தேக நபரை நீதி மன்றில் ஆயர் படுத்த நடவடிக்கை மெற்கொள்ளப்படுவதாவும் அக்கரைப்பற்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்

No comments: