Thursday 31 December 2015

ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

திவிநெகும திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் தலைமையில் இன்று (31) காலை இடம்பெற்றது.


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திவிநெகும உதவிபெறுகின்ற, பெண் தலைமைதாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த, தையல் தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட 31 பெண்கள் தமக்கான தையல் இயந்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளரோடு இணைந்து தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கணக்காளர் கே.கேசகன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.இராசஸ்ரீ ஆகியோர் குறித்த பயனாளிகளுக்கான தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தனர்.





No comments: