Sunday 1 November 2015

பாலியல் வல்லுறவு

அக்கரைப்பற்று,ஒலுவில் பிரதேசத்தில்  சனிக்கிழமை நள்ளிரவு உள்ள வீடொன்றுக்குள் அத்துமிறி நுழைந்து 32 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மூவரை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் 9 ஆம் பிரிவிலுள்ள தனது வீட்டில் சகோதரனுடனும் மூன்று பிள்ளைகளுடனும் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில்,சம்பவத்தினத்தன்று நள்ளிரவு வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது நித்திரையில் இருந்து எழும்பி கதவை திறந்த போது உள்ளே நுழைந்த மூவர் சகோதரனை அறை ஒன்றுக்குள் கட்டிவைத்து விட்டு மூவரும் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்டப் பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


No comments: