Monday 9 November 2015

சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரத்தை மீறி ஆற்று மணல் ஏற்றிய நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம். பஸீல் இன்று திங்கட்கிழமை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். 

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

No comments: