Wednesday 18 November 2015

தங்கநகை மோசடி

தங்கநகையெனக் கூறி பித்தளை நகையை 04 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 04 பேரை எதிர்;வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில்  பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்;ந்த பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அம்பாறையைச் சேர்;ந்த ஒருவரையும் ஹேமாதகமயைச் சேர்ந்த ஒருவரையும் அநுராதபுரத்தைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்

No comments: