Sunday 29 March 2020

கர்ப்பணி பெண் துக்கில் தொங்கி தற்கொலை..

haran
சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பணி பெண் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்


சின்ன ஊறணி பாடசாலை வீதியைச் சோந்த 25 வயதுடைய துவேந்திரன் துசாந்தினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கிடைய குடும்பதகராறு இடம் பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதேவேளை குறித்த இடத்திற்கு பொலிஸ் தடவியல் பிரிவினரின் விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
மட்டக்களப்பில் 3 மாத கர்ப்பணி தாய் ஒருவரின் சடலம் மீட்பு Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: