Monday 5 October 2015

அம்பாறை மாவட்டம் இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.... ஆரம்ப கைத்தொழில் அமைச்சர தயாகமகே





அதற்காக ஜாதி மத பேதமின்றி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கை மக்கள் எனும் எண்ணத்துடன் பயணிக்க வேண்டும் 

என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சருமான தயாகமகே தெரிவித்தார். 

ஜக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட தமிழ் பிராந்திய செயற்பாட்டுக் குழு தலைமைக் காரியாலய்த்தினை  திறந்துவைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(04) ஆலையடிவேம்பு செயற்பாட்டுக் குழு செயலாளர் ஜெயாகரின் தலைமையில் இடம் பெற்றது.

ஆலையடிவேம்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அம்பாறை மாவட்ட தழிழ் பிராந்திய செயற்பாட்டு தலைமை காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையில் இனி இன,மத வேறுபாட்டுக்கு இடமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வரவேண்டும். 

ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில்  சிறந்ததொரு அரசியல் புரட்சி ஏற்படுத்தப்பட்டது.  

இவ்வாறான சிறந்த அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தியதன் விளைவாக வெளிநாடுகளில் நாம் சிறந்த நன்மதிப்பை இன்று பெற்றுள்ளோம். அவ்வாறான மாற்றம் ஏற்படவில்லையாயின்  நாடானது இருண்ட யுகத்துக்குள் சென்றிருக்கும் என்றார். 

No comments: