Monday 5 October 2015

பார ஊர்தி விபத்தில் 04 பேர் படுகாயம.....



அக்கரைப்பற்று, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு சிப்பித்திடல் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை பார ஊர்தியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தினுள் விழுந்ததில் படுகாயமடைந்த 04 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த விபத்தில் சாரதியும் பார ஊர்தியில் பயணித்த 03 சிறுவர்களுமே காயமடைந்துள்ளனர். 

அக்கரைப்பற்றிலிருந்து  சாகாம பிரதேசத்தை நோக்கி சென்ற பார ஊர்தி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

No comments: