Thursday 23 April 2015

விவேகானந்தர் இளைஞர் கழக சித்திரை விளையாட்டுப்போட்டிகள்

அக்கரைப்பற்று – 8, விவேகானந்தர் இளைஞர் கழகம் நடாத்திய சிறுவர்களுக்கான சித்திரை விளையாட்டுப்போட்டிகள் கடந்த 17-04-2015, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.



ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் சிறப்பு அதிதியாகவும், கிராம உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீதாசன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்ட இவ்விளையாட்டு போட்டிகளில் சிறுவர் விளையாட்டுக்களான யானைக்குக் கண் வைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், வினோத உடைப்போட்டி, மிட்டாய் பொறுக்குதல் உட்படப் பல போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதுடன், வெற்றிபெற்ற சிறார்களுக்குப் பிரதேச செயலாளர் தலைமையிலான அதிதிகளால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

No comments: