Saturday 18 April 2015

பொத்துவில் ஆதார வைத்திய சாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்...

 
அம்பாரை பொத்துவில் ஆதாரவைத்தியசாலையில் காணப்படும் பௌதீக வளங்கள் மற்றும் ஆளணி வளங்களை நிவர்த்தி செய்து பொத்துவில் பிரதேசத்தில் காணப்படும் முஸ்லிம்,தமிழ் சிங்கள மக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்குமாறு கோரி இன்று 18ம் திகதி சனிக்கிழமை பொத்துவில் பொது மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கோரிக்கை அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் பொத்துவில் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக 2007ம் ஆண்டு தரம் உயர்த்திய நிலையில் ஆதார வைத்தியசாலைக்கு தேவையான வசதிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் இவ. வைத்தியசாலை இயங்கி வருகின்றது.


மேலும் இவ்வைத்தியசாலைக்கு விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்படவில்லை மேலும் மயக்க மருந்து வழங்கும் விசேட வைத்திய நிபுணர் இல்லாமை அத்துடன் சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு தேவையான வைத்திய உபகரணங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போது பணி புரியும் மகப்பேற்று வைத்தியரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரியும் கிழக்கு மாகாண சபையால் முடியாமல் விட்டால் பொத்துவில் ஆதார வைத்தியசாலையை பெயருக்காக வைத்திருக்காமல் மத்திய அரசிடம் கையளிக்குமாறும் கோரியும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவ் வினைத்திறன் அற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பங்கு பற்றாத தற்போதய அபிவிருத்தி குழுவை கலைத்து புதிய குழுவை அமைக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பொத்துவில் பிரதேசத்தை அரசியல் வாதிகள் வாக்கு வங்கியாக மட்டும் கருதாது இங்கு மக்கள் வாழ்கின்றார்கள் அவர்களையும் கருத்தி கொள்வதடன் 
அன்மையில் பொத்தவில் ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சுகாதார இராஜங்க அமைச்சர் ஹஸன் அலி தெரிவித்ததாவது இவ் வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்திருந்தும் 
இதுவரையில் வாக்குறிதியை நிவர்த்தி செய்து கொடுக்காது கல்முனையில் இரண்டு ஆதார வைத்தியசாலைகள் இருக்கின்ற நிலையில் அதற்கு அண்மையில் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம்  திவித்துள்ளனர்.


ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் ஏந்திய கோசங்களாவன ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திசெய், சுகாதார உதவியாளர்களை உடன் நியமி,நிரந்தர விபியை நியமி,ஈ.சி.ஜீ யை நியமி வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய் மற்றும் மகப் பேற்று வைத்திய நிபுணரின் இடமாற்றத்தை உடனடியாக நிவர்த்தி செய் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்துடன் பொத்துவில் பௌத்த விகாராதிபதியும்  கலந்து கொண்டிருந்துடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் இடம் வைத்தியசாலையின் தேவைகள் அடங்கிய மகஜரியை சுகாதார அமைச்சரிடம் வழக்குமாறு தெரிவித்து பொது மக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: