Friday 28 February 2014

"நடமாடும் சேவை நிலைய மாற்றம் தொடர்பான அறிவித்தல்"

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கிராமம் கிராமமாக – வீடு வீடாக' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 04-03-2014, செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று - 7/4 கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ள இடமானது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு அக்கரைப்பற்று - 7/4 இல் சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் அருகாமையிலுள்ள சமுக பராமரிப்பு நிலையத்தில் நடைபெறமாட்டாது.

தவிர்க்கமுடியாத சில காரணங்களால் குறிப்பிட்ட நடமாடும் சேவையானது பொது நூலகத்திற்கு அருகிலுள்ள ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் அன்றைய தினத்தில் (04-03-2014) நடாத்தப்படும் என்பதைக் குறிப்பிட்ட கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

இந்த மாற்றம் தொடர்பில் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

No comments: