Friday 21 February 2014


(உ.உதயகாந்த்)

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான இவ்வாண்டின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் கடந்த (13) காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேச பொதுத்துறை ஸ்தாபனங்கள் மற்றும் கிராமமட்ட அபிவிருத்திக்குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்ட இக்கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் வரவேற்புரையுடன் ஆரம்பானதோடு, பிரதேச அபிவிருத்தி குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பான விளக்கங்கள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜாவினால் வழங்கப்பட்டன.

அதனையடுத்து இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கடந்தகால நிதியொதுக்கீடுகள் தொடர்பில் உண்டான குறை நிறைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கான உபகரணங்களும், அக்கரைப்பற்று – 7/2 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்காக தள்ளுவண்டியொன்றும் நாடாளுமன்ற உறுப்பினரால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன.









No comments: