Friday 7 February 2014

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சுதந்திரதின வைபவம்"

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 66 ஆவது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் தேசியக்கொடியேற்றும் உத்தியோகபூர்வ நிகழ்வானது சுதந்திரதினமான கடந்த 04-02-2014, செவ்வாய்க்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன் பிரதேச செயலாளருடன் இணைந்து பிரதேச செயலக வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளைகளையும் நாட்டிவைத்தார்.

இவ்வைபவங்களில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments: