(உ.உதயகாந்த்)
ஆலையடிவேம்பு தெற்கு வலய சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் பயன்பெறுனர்களுக்கிடையில் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகசபையினைத் தெரிவுசெய்வதற்கான கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று (11) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, சமுர்த்தி மகாசங்கப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், வங்கி முகாமையாளர் கே.அசோக்குமார், உதவி முகாமையாளர் ஏ.டபிள்யூ.கணேசமூர்த்தி மற்றும் ஆலையடிவேம்பு தெற்கு வலய சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் பயனாளிக்குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் பிரசன்னமாயிருந்த இக்கூட்டத்தில் இடம்பெற்ற நிருவாகசபை தெரிவின்போது புதிய தலைவர், உப தலைவர் அடங்கலாக 15 பேர் கொண்ட நிருவாகக்குழு தெரிவு செய்யப்பட்டதுடன், அக்குழுவுக்கான முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் எதிர்வரும் 18-02-2014, செவ்வாய்க்கிழமை குறித்த சமுர்த்தி வங்கியின் காரியாலயத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment