Tuesday 23 February 2021

கின் கங்கையில் குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள்

காலியில் உள்ள கின் கங்கையின்  நீர் ஓட்டத்தை தடைசெய்யும் வக்வெல்ல பாலத்தின் கீழ் தேங்கிய  குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள் அண்மையில் ஈடுபட்டனர்.

இதற்கமைய  பாலத்தின் கீழ் குப்பை கூளங்களால்  ஏற்பட்ட அடைப்பு கடற்படையின் சுழியோடிகள் மற்றும் மரைன் குழுவினரால்  இணைந்து  அகற்றப்பட்டது.

நீரோட்டத்தில் படிப்படியாக முறையற்ற வகையில் சேரும் குப்பைகள், முறிந்து விழுந்த மரங்கள், மூங்கில் புதர்கள் என்பன  பாலத்தின் கீழ் தேங்குவதனால் ஆற்று நீர் தடையின்றி ஓடுவதற்குத் தடை ஏற்படுத்துகிறது.

கிந்தோட்டையில் கடலுடன் சங்கமிக்கும்  கின் கங்கையின் இயல்பான நீரோட்டம் வக்வெல்ல மற்றும் தெமட்டகொட  பாலங்களின் கீழ் தேங்கும் குப்பைகூளங்கள் காரணமாக தடைபடுவதனால் இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அதனை அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

No comments: