Friday 12 August 2016

ஆலயத்தில் படுகொலை 26ஆவது வருட நினைவுதினம்

அம்பாறை, வீரமுனைப் பிரதேசத்தில்  தமிழ் மக்கள் 155 பேர் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டு 26ஆவது வருட நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை  அனுஷ்டிக்கப்பட்டது. வீரமுனை விசேட பூஜை வழிபாட்டுடன் ஆலயத்துக்கு அருகில்; அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மக்கள் சென்று ஆத்மசாந்தி வேண்டி சுடர் ஏற்றி பிரார்த்தித்தனர். சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வீரமுனை கிராமத்தில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் 155 பேர்,  1990ஆம் ஆண்டு 8;ஆம் மாதம் 12ஆம் திகதி வீரமுனை காளிகோவில் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 

No comments: