Saturday 24 August 2013

மரம் பறித்தவர் மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ஹரனி

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மரம் அரியும் ஆலை ஒன்றில் லொறியில் இருந்து மரம் பறிக்கும் போது மரம் பறித்தவர் மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபகரமா உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவத்தனர்.
இவ்வாறு பாலகம சலிகம கித்துல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய  கே.எல். பிரதீப். என்பவரே உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று பழைய ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மரம் அரியும் ஆலைஒன்றில் அவிசாவளை பிரதேசத்தில் இருந்து லொறியில் மரங்களை கொண்டுவந்து மரம் அரியும் ஆலையில் சம்பவதினமான நேற்று மாலை 6.00 மணிக்கு லொறியில் இருந்த மரங்களை நிவத்தில் நின்று  பறித்துக் கொண்டிருந்தபோது மரம் ஒன்று தவறி அவர் மீது வீழ்ந்ததையடுத்து சம்பவ இடத்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின்; சடலம் அக்கரைப்பற்று ஆhதாரவைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments: