Thursday 10 May 2018

ஊடகம், செய்தித்துறை பயிற்சிப் பட்டறை

haran
காட்சி ஊடகம், செய்தித்துறை, அறிவிப்பு தொடர்பான ஒருநாள் செயன்முறைப் பயிற்சிப் பட்டறையொன்று எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.



இதனை ஊடகம் மற்றும் ஆய்வுக்கான கல்லூரி, சிறகுநுனி என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. தேசிய ஊடகக் கல்லூரி மற்றும் தேசிய ஊடகங்களைச் சேர்ந்த பயிற்றுனர்கள் இந்நிகழ்வில் வளவாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.  காலை 9.00 முதல் மாலை 4.00 வரை நடைபெறவுள்ள இந் நிகழ்வில் ஆர்வமிக்க 16 – 35 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளமுடியும்.

முற்றிலும் இலவசமான இத் தமிழ்மொழி மூல செயன்முறைப் பயிற்சியில் பங்குபற்ற விரும்புவோர் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம் ஆகியவிபரங்களை குறுஞ்செய்தியாக (0764 475 375) அல்லது மின்னஞ்சலாக (cmratinfo@gmail.com) எதிர்வரும்மே 12ம் திகதிக்குமுன் அனுப்பிதம்மைப் பதிவுசெய்து கொள்ளலாம்.

மேலதிகதகவல்களுக்கு FFacebook.com/CMR.sirahununi/

கல்லடியில் நடைபெறவிருக்கும் நாளைய ஊடகம் இலவச பயிற்சிப்பட்டறை Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka

No comments: