Tuesday 24 October 2017

பிற்பொக்கற் அடித்த திருடன் கமராவில் சிக்கினான்

haran

(க.சரவணன்)

மதுபானக்கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவரின் 45 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பையை பிற்பொக்கற் அடித்த ஒருவரை சீசீரி கமராவில்  பதியப்பட்ட காட்சி மூலம்  ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்த சம்பவம்அக்கரைப்பற்றில் இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.


இப் பிரதேசத்திலுள்ள மதுபானக் கடை ஒன்றில் சம்பவதினமான
ஞாயிற்றக்கிழமை பகல் இப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மதுக்கடையில்
நெருசல்களுக்கு  மத்தியில் மதுபானம் வாங்கிக் கொண்டிருந்தபோது அவரின்
ரவுசரில் பின் பகுதி பொக்கற்றில் வைத்திருந்த கைபையில் 45 பணத்துடன்
பிற்பொக்கற் காரரிடம் பறிகொடுத்துள்ளார்.

இதனையடுத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார்உடனடியாக செயற்பட்டு குறித்த கடையிலுள்ள சீசீரி கமராவை சோதனையிட்டபோது அதில் குறித் நபரின் ரவுசரின் பின்பகுதி பொக்கற்றில் உள்ள கைப்பையை திருடும் நபரை அடையாளம் காட்டியுள்ள நிலையில் சின்ன முகத்தவாரத்தைச்சேர்ந்த குறித்த நபரை இரவு கைது செய்தனர்.


இதில் கைது செய்யபபட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்

No comments: