Sunday 31 July 2016

கோடரியால் கொத்திக் கொலை

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கிராமத்தில் சனிக்கிழமை (30) இரவு குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி (வயது 46) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


மட்டக்களப்பு, களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த  தங்கவடிவேல் பார்த்தீபன் (வயது 42) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

விவசாயியான இவர், வெற்றிலை வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்துள்ளார். தம்பிலுவில் கிராமம் 02ஆம் பிரிவைச் சேர்ந்த இச்சந்தேக நபர், ஏற்கெனவே திருமணம் முடித்த நிலையில் அவருக்கு 02 பிள்ளைகள் இருப்பதுடன், அவரது கணவரும் ஏற்கெனவே உயிரிழந்துள்ளார்.   இதன் பின்னர், இச்சந்தேக நபர் இரண்டாம் தாரமாக பார்த்தீபனை திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையில் நீண்டநாட்களாக தகராறு இருந்துவந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். 


. இவரைத் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: