Tuesday 14 June 2016

சட்ட விரோதமாக ஆற்று மணல்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஆலங்குளம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்ட விரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு நபர்களில் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் மற்றைய நபருக்கு 15 ஆயிரம் ரூபாயும் அபராதடாக செலுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி இன்று செவ்வாய்க்கிழமை த்தரவிட்டார்.


 அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர். 
கைது செய்யப்பட்டவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 

No comments: